Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

By: Monisha Sat, 16 July 2022 6:02:32 PM

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது.எனினும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாலையில் முடிவு வந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

hospital,corona,admitted,confirmed ,கொரோனா,மருத்துவமனை,அனுமதி,
சிகிச்சை,

இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags :
|