Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

By: vaithegi Mon, 20 Feb 2023 09:43:44 AM

கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை


சென்னை: இன்று ஆலோசனை ... சென்னையில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. அப்போது வெளியான அறிவிப்பில், சென்னை எழும்பூரில் பிப்ரவரி 20-ம் தேதி மாலை 4 மணிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், பிரச்சார களம் மிகவும் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசு-வுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

counseling,club administrators ,ஆலோசனை,கழக நிர்வாகிகள்


இதனை அடுத்து தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வாக்கு சேகரிப்போம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதுவரை பிரச்சார களத்திற்குச் செல்லவில்லை. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சரியாக இடைத்தேர்தலுக்கு ஒருவார காலம் முன்னதாக நடைபெறும் இக்கூட்டத்தில், இடைத்தேர்தல் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், தங்களது அணியை பலத்தை அதிகரிக்கும் விதமாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :