Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னீர்செல்வம் காலையில் திடீரென குஜராத்துக்கு புறப்பட்டுள்ளார்

ஓ.பன்னீர்செல்வம் காலையில் திடீரென குஜராத்துக்கு புறப்பட்டுள்ளார்

By: vaithegi Sun, 22 Jan 2023 10:12:53 AM

ஓ.பன்னீர்செல்வம் காலையில் திடீரென குஜராத்துக்கு புறப்பட்டுள்ளார்


சென்னை: திடீரென குஜராத் பயணம் ... ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது.இதையடுத்து இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. எனவே இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது.

gujarat,o. panneerselvam,travel , குஜராத்,ஓ.பன்னீர்செல்வம்,பயணம்

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டு வருகிறது. அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது.

இதை தொடர்ந்து நேற்று தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும், குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


Tags :