- வீடு›
- செய்திகள்›
- புயலை எதிர்கொள்ள அரசு தயார்... மக்கள் பாதுகாப்பாக இருக்க ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
புயலை எதிர்கொள்ள அரசு தயார்... மக்கள் பாதுகாப்பாக இருக்க ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
By: Monisha Wed, 25 Nov 2020 08:49:34 AM
நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதனால் புயலை எதிர்கொண்டு மக்களை காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், நிவர் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அரசு தயாராக உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- நிவர் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராக உள்ளது.
புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் இச்சமயங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.