Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஆக.20ல் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார்

வருகிற ஆக.20ல் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார்

By: vaithegi Fri, 11 Aug 2023 09:41:22 AM

வருகிற ஆக.20ல் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார்

சென்னை: ஆக.20ல் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை .... ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர்

o. panneerselvam,consultation,aiadmk conference ,ஓ.பன்னீர்செல்வம் ,ஆலோசனை ,அதிமுக மாநாடு

திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் அமைந்துள்ள YMCA ஆடிட்டோரியத்தில் ஆடிட்டோரியத்தில் வருகிற 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :