Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்.15 பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது

அக்.15 பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Thu, 13 Oct 2022 2:21:06 PM

அக்.15 பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது

தூத்துக்குடி : அக்.15ல் மின்சாரம் இருக்காது ... மின் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், பாதுகாப்பான தடையில்லா மின்சாரத்தை நுகர்வோர்களுக்கு வழங்கும் நோக்குடனும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது. மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் 15ம் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

electricity,thoothukudi ,மின்சாரம் ,தூத்துக்குடி

அதனால் அத்திமரப்பட்டி, , கேம்ப் – 1, கேம்ப் – 2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், வடக்கு தெரு தோப்புத் தெரு, முள்ளக்காடு, அபிராமி நகர், அனல் மின் நகர் பகுதி, பொட்டல்காடு,

இதையடுத்து பாரதி நகர், சுனாமி நகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :