அக். 11 ஆம் தேதி இங்கு மின் தடை
By: vaithegi Sat, 08 Oct 2022 12:26:13 PM
விருதுநகர் : மின் தடை .. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக
உள்ள துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே அதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகம்
செய்யப்படும் பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும்.
முன்னதாகவே
மின்சாரவாரியம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது
குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 11 ஆம்
தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட
முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற
இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் படி, முத்துராமலிங்கபுரம், நரிக்குடி, பரளச்சி மற்றும் அவற்றை
சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற அக்.
11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என
மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்சார தேவை இருப்பின் மாற்று ஏற்பாடு செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.