- வீடு›
- செய்திகள்›
- முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்
முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்
By: vaithegi Fri, 20 Oct 2023 3:45:40 PM
சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1 குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, மற்றும் 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 நேரடியாக பெண்குழந்தையின் வங்கி கணக்கில்வரவு வைக்கப்படுகிறது.
இதையடுத்து ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 1 முறையும் இந்த வைப்புத்தொகை புதுப்பிப்பு செய்யப்பட்டு அந்த பெண்குழந்தை 18 வயது நிறைவடைந்ததும் வட்டியுடன் சேர்த்து அத்தொகை மாவட்ட சமூக நலத்துறை மூலமாக அந்த குழந்தைக்கு வழங்கப்படும்.
Tags :