Advertisement

கரூர் மாவட்டத்தில் அக். 13 மின் விநியோகம் இருக்காது

By: vaithegi Wed, 12 Oct 2022 2:56:55 PM

கரூர் மாவட்டத்தில் அக். 13 மின் விநியோகம் இருக்காது

கரூர் : நாளை ( அக். 13) கரூர் மாவட்டம் ஆண்டிசெட்டிபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.அதனால் ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் பகுதியில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன் படி, ஆண்டிசெட்டிபாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிசெட்டிபாளையம், கோடந்தூர், தென்னிலை, காட்டுமுன்னூர், வடகரை, சி. கூடலூர், கார்வழி, காட்டம்பட்டி, பெரியதிருமங்கலம், தொக்குப்பட்டி, அரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும்.

power distribution,karur ,மின் விநியோகம் ,கரூர்

மேலும் ராஜபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும், சின்னதாராபுரம், டி. வெங்கிடாபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, புஞ்சைகாளகுறிச்சி,அணைப்புதூர், எலவனூர், தொக்குப்பட்டிபுதூர், நஞ்சைக்காளகுறிச்சி ஆகியபகுதிகளிலும்

இதையடுத்து ராஜபுரம், சூடாமணி, மற்றும் ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும், கருடையாம்பாளையம், நெடுங்கூர், க. பரமத்தி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :