Advertisement

திருநெல்வேலியில் அக். 6 ஆம் தேதி மின்தடை

By: vaithegi Mon, 03 Oct 2022 4:15:25 PM

திருநெல்வேலியில் அக். 6 ஆம் தேதி மின்தடை

திருநெல்வேலி: தமிழகத்தில் அக். 6 ஆம் தேதி மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.மாதந்தோறும் பராமரிப்பு பணிகளின் போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி ஆகியவை நடத்தப்படுகிறது.

இதையடுத்து அதன்படி வருகிற அக். 6 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம் மற்றும் வள்ளியூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக வள்ளியூர் மின் வினியோக செயற்பொறியாளர் வளனரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

power outage,tirunelveli ,மின்தடை ,திருநெல்வேலி

எனவே அதன் காரணமாக கோட்டைக்கருங்குளம் மற்றும் வள்ளியூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான குமாரபுரம், கோட்டைக்கருங்குளம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், சமூகரெங்கபுரம், வள்ளியூர், செம்பாடு, தெற்கு கள்ளிகுளம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளும்

மேலும் முடவன்குளம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, சமூகரெங்கபுரம், கிழவனேரி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :