Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா ரயில் விபத்து - புதுச்சேரி முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து - புதுச்சேரி முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு

By: vaithegi Sat, 03 June 2023 4:13:47 PM

ஒடிசா ரயில் விபத்து - புதுச்சேரி முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு

புதுச்சேரி : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார் ... ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த கோர விபத்தினால் சுமார் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும். 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். படுகாயம் அடைந்து சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டு உள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

condolence,puducherry chief minister ,இரங்கல் ,புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியைச் சார்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிந்தால், அவர்களை உடனடியாக மீட்கவும் அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ள உதவும் வகையில், புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், திறக்கப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். இந்த அவசரகால மையம் 24 மணிநேரமும் இயங்கும். கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1070, 1077, 112 , தொலைபேசி எண்கள்: 0413-2251003, 2255996. என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :