Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலியான அமெரிக்க தூதரகத்தில் இருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த அதிகாரிகள்

காலியான அமெரிக்க தூதரகத்தில் இருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த அதிகாரிகள்

By: Nagaraj Tue, 28 July 2020 4:02:09 PM

காலியான அமெரிக்க தூதரகத்தில் இருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த அதிகாரிகள்

சுவரொட்டிகளை ஒட்டிய அதிகாரிகள்... சீனாவின் செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொரிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்தனர்.

முன்னதாக, அமெரிக்காவில் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா வலியுறுத்தியதால், சீனாவின் செங்டூ நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டது.

chinese officials,english slogans,poster,chinese flag ,சீன அதிகாரிகள், ஆங்கில வாசகங்கள், சுவரொட்டி, சீனக் கொடி

இதையடுத்து, அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் வெளியேறிய பின், முழு கவச உடையில் களமிறங்கிய சுகாதாரத்துறை பணியாளர்கள், கிருமி நாசினியால் வளாகத்தை தூய்மைப்படுத்தினர். தூதரகத்துக்கு வெளியே போக்குவரத்தை தடை செய்த காவலர்கள், சீன கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களின் மீது சுவரொட்டிகளை ஒட்டி மறைந்தனர்.

Tags :
|