Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் கரையை கடக்கும் போது உயிரிழப்பு இருக்காமல் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

புயல் கரையை கடக்கும் போது உயிரிழப்பு இருக்காமல் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

By: Nagaraj Wed, 14 June 2023 6:26:03 PM

புயல் கரையை கடக்கும் போது உயிரிழப்பு இருக்காமல் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுடில்லி: அதிகாரிகளுக்கு உத்தரவு.... பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று அரசு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

குஜராத்தின் கட்ச் பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமித் ஷா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

central government,monitoring,gujarat,officials,property damage ,மத்திய அரசு, கண்காணிக்கும், குஜராத், அதிகாரிகள், பொருட்சேதம்

அப்போது பேசிய அவர், புயல் கரையை கடக்கையில் உயிரிழப்புகள் நேரிடக்கூடாதென்றும், அதேநேரத்தில் பொருட்சேதமும் குறைந்த அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

புயல் நிலவரத்தை உள்துறை அமைச்சகமும், குஜராத் மாநில அரசும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் என்றும், எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குஜராத் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

Tags :