திரையரங்கு உரிமையாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை
By: Nagaraj Wed, 04 Nov 2020 10:54:45 PM
தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்வேறு நிபந்தனைகளுடன் திரையரங்குகள் மற்றும் பள்ளிகளை திறக்க முடிவெடுத்து, அதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டத்தில் உள்ள
திரையரங்கு மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று
நடைபெற்றது.
கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானியை சேர்ந்த டிஎஸ்பிக்கள் மற்றும்
வட்டாட்சியர்கள் கலந்துகொண்டு விதிகளை தளர்வு செய்யும்போது, பொதுமக்களை
நோய் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பல்வேறு
கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.