Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து... விசாரணை தொடக்கம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து... விசாரணை தொடக்கம்

By: Nagaraj Mon, 23 Jan 2023 11:09:50 PM

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து... விசாரணை தொடக்கம்

ரஷ்யா: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து... ரஷ்யாவுக்குச் சொந்தமான முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில், Angarsk என்னும் இடத்தில் அமைந்துள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில், எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று தீப்பற்றி கரும்புகையுடன் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

mysterious explosion,multiple,investigation,initiation,firefighters ,மர்ம வெடிவிபத்து, பலமுறை, விசாரணை, துவக்கம், தீயணைப்பு வீரர்கள்

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே ரஷ்யாவில் இதுபோல பலமுறை மர்மமான முறையில் வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசகாரர்கள் மேற்கொண்டுவரும் சதிவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

4,300 சதுர அடி அளவிலான இடத்தை தீ கபளீகரம் செய்த நிலையில், தீயை அணைக்க 35 தீயணைப்பு வீரர்கள் போராடவேண்டியிருந்தது. மேலும் இந்த மர்ம வெடிவிபத்து தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

Tags :