மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய் கிணற்றில் தீ
By: Nagaraj Sat, 08 July 2023 3:44:10 PM
மெக்சிகோ: எண்ணெய் கிணற்றில் தீ விபத்து... மெக்சிகோ வளைகுடா கடல் பகுதியில் துளையிடப்பட்டுள்ள எண்ணெய் கிணற்றில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
அரசு எண்ணெய் நிறுவனமான பெமெக்ஸுக்கு சொந்தமான ஆழ்கடல் எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
படகுகளிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை கட்டுப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
அங்கு தினமும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
fire |