கட்டணம் கட்டாததால் 53 நாட்களாக நங்கூரமிட்டு காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்
By: Nagaraj Sat, 12 Nov 2022 10:47:07 AM
கொழும்பு: நங்கூரமிட்டு மசகு எண்ணெய் கப்பல் காத்திருக்கிறது. கடந்த 53 நாட்களாக இவ்வாறு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய்யை
இறக்குமதி செய்ய வந்த கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும்
இந்தக் கப்பலுக்காக 79 இலட்சம் டாலர்களுக்கு மேல் பணமாக செலுத்த
வேண்டியுள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிகாட்டியுள்ளது. மேலும்
இந்தக் கப்பலானது செப்டம்பர் 20 ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தை
அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags :
colombo |
port |
shipping |