ஆம்னி பஸ்கள் வழக்கம் போல இயங்கும் ... ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
By: vaithegi Fri, 09 Dec 2022 3:51:15 PM
சென்னை: வழக்கம் போல இயங்கும் ... வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் புயல் வீசும் நாளில் (இன்று இரவு ) பஸ் சேவை அளிக்க கூடாது எனவும் பஸ் நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த வொரு தகவலும் வரவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.