27, 28ம் தேதிகளில் மின்விநியோகம் நிருத்தம் செய்யப்படும் பகுதிகளில்
By: vaithegi Mon, 26 Sept 2022 6:12:24 PM
சென்னை: நாளை (27-09-2022) கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நெசவாளர் தெரு, குளச்சல் பேருந்து நிலையம், பள்ளி விளாகம்அழகனார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து நாளை கன்னியாகுமரி உப மின்நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவளம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், வாரியூர், பால்குளம், சின்ன மூட்டம் போன்ற பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதே போன்று செப்டம்பர் 28ம் தேதி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள டென்னிசன் ரோடு உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாகராஜா கோவில், மணி மேடை ஆகிய பகுதிகளிலும்
மேலும் டென்னிசன் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.