Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஏப்.25ம் தேதி இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

வருகிற ஏப்.25ம் தேதி இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Sun, 23 Apr 2023 11:24:09 AM

வருகிற ஏப்.25ம் தேதி இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏப்.25 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தம் .... தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது சீரான மின் விநியோகத்திற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் வரை மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.

electricity distribution,thanjavur , மின் விநியோகம்,தஞ்சாவூர்

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தஞ்சாவூரில் வருகிற ஏப்.25ம் தேதி மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மருத்துவக்கல்லுரி பகுதிகள், ராஜலிங்கம், ஈஸ்வரி நகர், , திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், ஆலக்குடி, ஏ.வி.பி.அழகம்மாள் நகர் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து மன்னர் சரபோஜி நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மாதாக்கோட்டை, முனிசிபல்காலனி, சோழன் நகர், வஸ்தாசாவடி, ரெட்டிபாளையம் ரோடு, பிள்ளையார்பட்டி, மனோஜிப்பட்டி, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர் ஆகிய பகுதிகளில் ஏப். 25ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வரியா உதவி செயற்பொறியாளர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :