ஆகஸ்ட் 14-ந் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை
By: vaithegi Tue, 16 Aug 2022 2:49:23 PM
சென்னை: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து, 76-வது ஆண்டு பிறந்துள்ளது. இதை அடுத்து சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார்.
இதன் இடையில், சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இதனால் அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி(ஞாயிறு கிழமை) டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதன்படி, டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.58.26 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் மட்டும் ரூ.55.77 கோடியும், சேலத்தில் மட்டும் ரூ.54.12 கோடியும், திருச்சியில் மட்டும் ரூ.53.48 கோடியும், கோவையில் மட்டும் ரூ.52.29 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.