ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர்
By: vaithegi Thu, 15 Dec 2022 12:08:08 PM
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும் அத்துடன் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து கொண்டு வருகின்றனர்.
எனவே இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து இந்த நிலையில் ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.