Advertisement

மதுரை அழகர் கோவிலில் வரும் 12ம் தேதி திருத்தேரோட்டம்

By: Nagaraj Thu, 04 Aug 2022 10:05:21 AM

மதுரை அழகர் கோவிலில் வரும் 12ம் தேதி திருத்தேரோட்டம்

மதுரை: வரும் 12ம் தேதி தேரோட்டம்... மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

மதுரை அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.

நாளை 5-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெறும். 6-ந் தேதி மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7-ந் தேதி மாலையில் கருட வாகனத்தில் புறப்பாடு, 8-ந் தேதி காலையில் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருள்கிறார்.

adithiruvizha,pushpa sapram,bhoopalalku festival,thiruther,festival ,ஆடித்திருவிழா, புஷ்ப சப்ரம், பூப்பல்லக்கு விழா, திருத்தேர், திருவிழா

மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி தருகிறார். 9-ந் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 11-ந் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார்.

இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும். இரவு பூப்பல்லக்கு விழா மற்றும் 13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி உற்சவ சாந்தியுடன் ஆடிதிருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags :