Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர், ஜி.கே. வாசன் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர், ஜி.கே. வாசன் வாழ்த்து

By: Monisha Wed, 23 Dec 2020 10:39:22 AM

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர், ஜி.கே. வாசன் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- "உழந்தும் உழவே தலை"

உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

farmers day,cm,greetings,tweet,report ,விவசாயிகள் தினம்,முதல்வர்,வாழ்த்து,ட்வீட், அறிக்கை

மேலும், தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதியை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம்.

‘விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’. ஆகவே, அவர்கள் உயர்வுக்கு நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்தபோது, விவசாயிகள் மட்டும்தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்நாளில் விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|