- வீடு›
- செய்திகள்›
- வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா
வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா
By: vaithegi Mon, 08 Aug 2022 12:29:06 PM
புதுடெல்லி: நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.
இதையடுத்து இந்நிலையில் வருகிற 10-ந்தேதியுடன் ஓய்வு பெறும் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, ஜெகதீப் தன்கர் நேற்று சந்தித்தார். துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் ஆன வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி, அவருக்கு இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி அவருக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெறும்.