Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து இந்த தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து இந்த தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை

By: vaithegi Sat, 09 Sept 2023 4:11:41 PM

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து இந்த தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 24.7.2023 தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு கடந்த 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.

மேலும் அத்துடன் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18.19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

chief minister m.k. stalin,consultation,womens entitlement scheme , முதல்வர் மு.க. ஸ்டாலின்,ஆலோசனை, மகளிர் உரிமைத் தொகை திட்டம்


இதையடுத்து இச்சூழலில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாளில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ தொடங்கப்படவுள்ளது எனவே .இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை மேற்கொள்கிறார். ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :