- வீடு›
- செய்திகள்›
- காந்தியடிகளின் வழியில் மதுவில்லா தமிழகம் அமைக்க இந்நாளில் உறுதி ஏற்போம் ... அன்புமணி
காந்தியடிகளின் வழியில் மதுவில்லா தமிழகம் அமைக்க இந்நாளில் உறுதி ஏற்போம் ... அன்புமணி
By: vaithegi Mon, 02 Oct 2023 3:57:51 PM
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த நாளில் இந்திய விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூறுவோம்.
மேலும் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை, மது வணிகம் மட்டும் கூடவே கூடாது என்று மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தினார்.
கல்வி வளர்ச்சிக்காகவும் கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் ஆயிரம் திட்டங்களை செயல்படுத்தினாலும் கூட மதுவின் தீமையால் மற்ற சாதகமான விஷயங்கள் பயனற்றுப் போகின்றன.
எனவே காந்தியடிகளின் வழியில் மதுவில்லா தமிழகம் அமைக்க இந்த நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்! "என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.