Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sat, 27 Aug 2022 6:29:24 PM

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளா: பொதுவாக ஓணம் பண்டிகை மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினத்தன்று மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு கொண்டு வருகிறது.

இந்த பண்டிகை தினத்தன்று வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் வசிக்கும் கேரள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு வந்து கொண்டாடுவார்கள். எனவே அதனால் பொதுமக்கள் அனைவரும் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட கேரள அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

school,college,vacation , பள்ளி, கல்லூரி,விடுமுறை

அதாவது மாணவர்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வகையில் மாநிலத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் விடுமுறைக்கு முன்பாக மாணவர்களுக்கு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று கடந்த 24ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் விரைவில் முடிக்கப்பட்டு மாணவர்கள் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

Tags :
|