Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை ..இந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை ..இந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 10 Aug 2023 3:34:08 PM

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை ..இந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

கேரளா : ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆக.26 முதல் 29 வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு ...இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுயிருந்தது.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினத்தை சேர்த்து மொத்தமாக 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

onam festival,bank holiday ,ஓணம் பண்டிகை,வங்கி விடுமுறை

அதாவது, ஆகஸ்ட் 26, ஆகஸ்ட் 27 (ஞாயிறு), உத்திராடம் பண்டிகையை தொடர்ந்து ஆகஸ்ட் 28 மற்றும் திருவோணம் பண்டிகையை தொடர்ந்து ஆகஸ்ட் 29 என 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த தொடர் விடுமுறையை அடுத்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி வங்கிகள் இயங்கும் எனவும், ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி மீண்டும் வங்கிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள தனியார் வங்கிகள் மட்டும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :