Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓணம் .. கேரளாவில் வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை பள்ளி, கல்லூரி விடுமுறை

ஓணம் .. கேரளாவில் வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை பள்ளி, கல்லூரி விடுமுறை

By: vaithegi Sun, 21 Aug 2022 3:56:11 PM

ஓணம் .. கேரளாவில்  வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை பள்ளி, கல்லூரி விடுமுறை

கேரளா: ஓணம் பண்டிகை பொதுவாக அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கப்படும். இந்த 10 நாட்களில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக மக்கள் அத்தப்பூ கோலமிடுவார்கள். இந்த பண்டிகையை மக்கள் அனைவரும் மிக சிறப்பாக கொண்டாட ஏதுவாக அரசு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும்.

எனவே அதன் படி பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் 24ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

school,college holidays,onam , பள்ளி, கல்லூரி விடுமுறை ,ஓணம்

மேலும் அத்துடன் மாணவர்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுமுறைக்கு முன்பாக மாணவர்களுக்கு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று 24ம் தேதி அன்று முதல் தேர்வுகள் தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக ஏராளமான நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தப்பட்டது.

Tags :
|