ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை
By: Nagaraj Fri, 17 July 2020 6:00:35 PM
நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துஷ்பிரயோகம் சம்பவத்தில் குழந்தையின் தலை, பாலத்தின் சுவர் அல்லது அங்கிருந்த பொருளொன்றில் மோதுண்டுள்ளதாக கருதப்படும் நிலையில், குழந்தை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது..
இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தாயின் மறைமுகக் காதலனான 22 வயது
இளைஞன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குழந்தையின் தாயும், காதலனின்
சகோதரர் ஆகியோரை குறித்த சம்பவத்துக்கு ஒத்துழைத்தமை மற்றும் தகவல் மறைப்பு
தொடர்பாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸார்
தெரிவித்துள்ளதுடன் குழந்தையின் சடலம் குறித்த சட்ட வைத்திய அதிகாரியின்
விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. குழந்தை
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்த பிரேதப்
பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் தலைமையிலான
குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது