கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ..இதனால் மொத்த பாதிப்பு 3 ஆக உயர்வு
By: vaithegi Fri, 22 July 2022 3:13:29 PM
திருவனந்தபுரம்: குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேலும் ஒருவருக்கு கேரளாவில் பாதிப்பு உறுதியானதால், தமிழக-கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை மிக தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இதனால் மொத்த பாதிப்பு 3 ஆக உயர்ந்துள்ளது.
மலப்புரத்தைச் சேர்ந்த இவர் ஜூலை 6ஆம் தேதி கேரளாவிற்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத் துறை மந்திரி வீனா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருவதாகவும் மந்திரி கூறினார். இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருமே கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.