Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு

By: Nagaraj Tue, 02 Aug 2022 4:51:09 PM

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு

கேரளா: மேலும் ஒருவருக்கு பாதிப்பு... கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒருவருக்கு இதே போன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

kerala,prevalence,population,gulf countries,monkey measles ,கேரளா, பாதிப்பு, எண்ணிக்கை, வளைகுடா நாடு, குரங்கு அம்மை

இந்நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 27ஆம் தேதி இவர் வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அவருக்கு லேசான காய்ச்சலும், கொப்பளங்களும் இருந்ததால் அவரது ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இவரையும் சேர்த்து கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானவரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

Tags :
|