Advertisement

கோவையில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

By: vaithegi Sat, 22 Apr 2023 3:06:50 PM

கோவையில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கோவை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், சமீப நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த 15ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுமார் 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Tags :
|