Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசை வென்ற ‘ஷக்கி பெயின்’ நாவல்

உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசை வென்ற ‘ஷக்கி பெயின்’ நாவல்

By: Karunakaran Sat, 21 Nov 2020 10:31:48 AM

உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசை வென்ற ‘ஷக்கி பெயின்’ நாவல்

பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் நாவல்களில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படுவது வழக்கம். பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் நாவல்களில் இருந்து சிறந்த நாவல் தேர்வு செய்யப்படும்.

கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் பல நாவல்களை படித்து, அவற்றில் சில நாவல்களை அரையிறுதிச் சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர்.

highest prizes,world,booker prize-,shacky pain ,அதிக பரிசுகள், உலகம், புக்கர் பரிசு-, ஷக்கி பெயின்

இதில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அவ்னி தோஷியின் 'பிரன்ட் சுகர்' என்ற நாவல் உட்பட 6 புத்தகங்கள் தேர்வாயின. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எழுத்தாள டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய 'ஷக்கி பெயின்' நாவல் புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கு இடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நேசிக்கும் குழந்தைகள் பற்றியது இந்தப் புத்தகம். அதன்படி, இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசு, ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ‘ஷக்கி பெயின்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது.

Tags :
|