Advertisement

தூத்துக்குடியில் கொரோனாவால் ஒரு நபர் உயிரிழப்பு

By: vaithegi Tue, 04 Apr 2023 2:34:40 PM

தூத்துக்குடியில் கொரோனாவால் ஒரு நபர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக பார்த்திபன் எனும் 55வயது நபர் உயிரிழப்பு .. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் சற்று உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவுள்ளது. மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

death,corona ,உயிரிழப்பு, கொரோனா

இதனை அடுத்து நேற்று காரைக்காலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

தற்போது இன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் எனும் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 23-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|