Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை

உத்தரகாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை

By: vaithegi Wed, 05 July 2023 1:58:17 PM

உத்தரகாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை

உத்தரகாண்டு : கன்வார் யாத்திரியை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 16ம் தேதி வரை விடுமுறை .... இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் கன்வார் யாத்திரை நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்த கன்வர் யாத்திரை என்பது சிவபக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பர்.

இதையடுத்து இந்த பயணத்தின் போது பக்தர்கள் காவி உடை அணிந்து தோள்களில் மூங்கிலால் ஆன கம்புடன் புனித நீரை கூடத்தில் கட்டி தொங்கவிட்டு செல்வர். இப்பாதயாத்திரையில் புனித தலங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு நீரை அர்ப்பணிப்பார்.

holiday,uttarakhand ,விடுமுறை ,உத்தரகாண்டு


இந்த புனிதமான கன்வார் யாத்திரை நடப்பாண்டு வருகிற ஜூலை – 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இதனை முன்னிட்டு கங்கை நதி அமைந்துள்ள உத்ரகாண்ட் மாநிலத்தில் முன்னேற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அந்த மாநிலத்தில் உ.பி மாவட்டத்தில் வருகிற ஜூலை 8 – 16 ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :