Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங்

நாளை இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங்

By: Nagaraj Fri, 19 Aug 2022 10:42:50 AM

நாளை இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங்

சென்னை: நாளை தொடங்குகிறது கவுன்சிலிங்... அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 16ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.பட்டியலில் குறைகள், ஆட்சபேனை இருக்கும் மாணவர்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நாளை துவங்க உள்ளது.

officers,counselling,committee,students,optional colleges ,அதிகாரிகள், கவுன்சிலிங், கமிட்டி, மாணவர்கள், விருப்ப கல்லூரிகள்

முதற்கட்டமாக சிறப்பு பிரிவு ஒதுக்கீடு பெறும், 25 ஆயிரத்து 18 மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வரும், 23ம் தேதி வரை சிறப்பு பிரிவு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அதன்பின், 25ம் தேதி முதல் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது.

சிறப்பு பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான 'சாய்ஸ் பில்லிங்' என்ற விருப்ப கல்லுாரிகளின் பதிவு விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :