- வீடு›
- செய்திகள்›
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா .. இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா .. இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
By: vaithegi Fri, 24 Mar 2023 11:30:13 AM
சென்னை: இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கபடுகிறது ... தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார்.
இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே சட்டத்துறை மூலம் இன்று ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.