Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

By: Karunakaran Mon, 27 July 2020 12:13:27 PM

தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

ஆசியாவிலே மிகப்பெரிய குடிசைப்பகுதி மும்பை தாராவியில் உள்ளது. மக்கள் நெருக்கம் மிகவும் அதிகம் உள்ள மும்பை தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது. இருப்பினும் இந்த மாதம் ஒரு சில நாட்கள் அங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

தற்போது கடந்த சில நாட்களாக தாராவியில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. நேற்று தாராவியில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 2 ஆயிரத்து 531 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona infection,dharavi,corona virus,corona recovery ,கொரோனா தொற்று, தாராவி, கொரோனா வைரஸ், கொரோனா மீட்பு

தாராவியில் இதுவரை 2 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துவிட்டனர். தாராவியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட போதும் தாராவி உள்ளடக்கிய ‘ஜி’ வடக்கு வார்டின் மற்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

மாகிமைவிட தாதரில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று தாதரில் 29 பேருக்கும், மாகிமில் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அந்த பகுதிகளில் முறையே 1,618, 1,605 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :