Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது... முடிவு எடுக்கவில்லை என பதில்

விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது... முடிவு எடுக்கவில்லை என பதில்

By: Nagaraj Wed, 28 June 2023 8:06:42 PM

விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது... முடிவு எடுக்கவில்லை என பதில்

சென்னை: பதில் மனு தாக்குதல்... ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில், 'முரசொலி' அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகார் குறித்து விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாகவும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவர் பதில் அளித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது.

அறக்கட்டளை சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் சார்பில், இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை,'' என்றார். இதையடுத்து, பதில் மனுத் தாக்கல் செய்ய, ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

answer petition,advocates,hearing,adjournment,decision ,பதில் மனு, வழக்கறிஞர்கள், விசாரணை, தள்ளி வைப்பு, முடிவு

இவ்வழக்கில், ஆணையத்தின் தலைவர் சார்பில், இயக்குனர் டாக்டர் சாது ரவிவர்மன் தாக்கல் செய்த பதில் மனு: பஞ்சமி நிலம் தொடர்பான புகார் என்பதால், விசாரணைக்காக எடுக்கப்பட்டது. சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம், ஆணையத்துக்கு உள்ளது என்பதால், முரசொலி நிலப் பிரச்னையை விசாரித்தோம்.

இதில், எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் வாதத்துக்காக, இவ்வழக்கின் விசாரணை, ஜூலை 7க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags :