மழை காரணமாக திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
By: vaithegi Thu, 02 Feb 2023 8:32:53 PM
திருவாரூர் : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை .... தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது, காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதையடுத்து ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடியுபெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது, அதன்பின் கிழக்கு திசையின் காற்றின் வேகம் காரணமாக கடந்த வாரம் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, இன்று காலை முதல் திருவாரூரில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் மழை காரணமாக மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அவர்கள் அறிவித்துள்ளார்.