Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அடுக்குமாடி வீடுகள் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அடுக்குமாடி வீடுகள் திறப்பு

By: Nagaraj Tue, 24 Nov 2020 09:46:05 AM

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அடுக்குமாடி வீடுகள் திறப்பு

தமிழக எம்.பி.,க்கள் பிரச்னைக்கு தீர்வு... நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழக எம்.பி.க்கள் பலருக்கு டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற பிரச்னைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.

டெல்லி பி.டி.மார்க் பகுதியில் உள்ள 80 வருட பழைமையான 8 பங்களாக்கள் இருந்த இடத்தில், எம்.பி.க்கள் வசிப்பதற்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு, சூரிய மின்சக்தி, எரிசக்தி சேமிப்பு போன்ற முறைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த

நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடி வீடுகளில் பசுமை கட்டட வளாகத்துக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. இந்தப் புதிய அடுக்குமாடி வீடுகள், குடியிருப்புவாசிகள் மற்றும் எம்.பி.க்களுக்குப் பாதுகாப்பும், ஆரோக்கியமும் தருவதாக இருக்கும்” என்று கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தங்குமிட வசதி அளிப்பது நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், “நாடாளுமன்றச் செயல்பாடுகளில் ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இப்போது புதிய வசதி கிடைத்துள்ளது” என்றார்.

apartments,mps,problem solving,happiness ,அடுக்கு மாடி வீடுகள், எம்.பி.க்கள், பிரச்னைக்கு தீர்வு, மகிழ்ச்சி

இளைஞர்களுக்கு 16 முதல் 18 வரையிலான வயது முக்கிய காலக்கட்டமாக இருக்கிறது என்று கூறிய அவர், நாம் 16ஆவது மக்களவை பதவிக் காலத்தை 2019இல் நிறைவு செய்தோம் என்றும், இந்தக் காலகட்டம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவமானதாக உள்ளது என்றும் கூறினார். 17ஆவது மக்களவையின் பதவிக் காலம் 2019இல் தொடங்கியது என்றும், இந்தக் காலகட்டத்தில் இந்த மக்களவையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்று முக்கியத்துவமானவையாக இருக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தமிழக எம்.பி.க்கள் பலருக்கு டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும், அந்த வீடு தங்களுக்கு வசதியாக இல்லை எனவும் தகவல்கள் வெளிவந்தன. இதன் காரணமாக தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு திறக்கப்பட்டதால் எம்.பி.க்களுக்கு நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Tags :
|