Advertisement

மேட்டூர் அணை திறப்பு.. விவசாயிகள் கவலை..

By: Monisha Tue, 12 July 2022 8:08:57 PM

மேட்டூர் அணை திறப்பு.. விவசாயிகள் கவலை..

தமிழ்நாடு: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ,மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத் துறை ராமமூர்த்தி இடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

mettur,dam,farmers,water ,மேட்டூர், அணை,புகார் ,மனு,

அதில் அவர்,மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் இதுவரை மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை.

இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 ஆயிரம் கன அடி நீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Tags :
|
|