Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் நேரத்தை அதிகரித்து அரசு உத்தரவு

பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் நேரத்தை அதிகரித்து அரசு உத்தரவு

By: Nagaraj Sat, 09 May 2020 4:54:03 PM

பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் நேரத்தை அதிகரித்து அரசு உத்தரவு

பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 3-ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஓன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

petrol stocks,run,announce,tamil nadu government,extension ,பெட்ரோல் பங்குகள், இயங்க, அறிவிப்பு, தமிழக அரசு, நீட்டிப்பு

இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|