Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலைக்கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள்... மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்

முதலைக்கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள்... மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்

By: Nagaraj Tue, 01 Aug 2023 07:04:59 AM

முதலைக்கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள்... மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்

புதுடில்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மணிப்பூர் இனக் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவாதத்தை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூருக்குச் சென்று, அம்மாநில மக்களிடம் பேசிவிட்டுத் திரும்பி வந்துள்ளனர். மணிப்பூர் மக்களிடம் அவர்கள் பேசியதை நாங்களும் கேட்க விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் அது குறித்து அவர்கள் பேசுவதை யார் தடுக்கிறார்கள்? நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது ஏன் விவாதிக்க மறுக்கிறார்கள்

union minister,nirmala sitharaman,crocodile tears,coalition government ,மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், முதலைக்கண்ணீர், கூட்டணி ஆட்சி

மணிப்பூர் மக்கள் குறித்த அவர்களின் கவலை உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் நாடாளுமன்ற விவாதத்தை அனுமதித்து இருப்பார்கள். எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனத்தை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது.

மணிப்பூர் கலவரம் என்று கூறி, அவர்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முற்றிலுமாக சீர்குலைத்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். எதிர்க்கட்சிகளின் மனநிலை அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைப் போலவே கருப்புதான்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, மணிப்பூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்தபோது ஒரு வருடத்துக்கு எந்த உள்துறை அமைச்சரும் அங்கு செல்லவில்லை. ஆனால், தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார்.

நிவாரண முகாம்களில் இருந்து அம்மாநில மக்களைச் சென்று சந்தித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மணிப்பூருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் யார்? ஒருவேளை மத்திய இணை அமைச்சர் ஒருவர் சென்றிருக்கலாம்" என்று நிர்மலா சீதாராமன் அப்போது கூறினார்.

Tags :