Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டசபை தேர்தல்... ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சட்டசபை தேர்தல்... ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

By: Monisha Mon, 14 Dec 2020 07:38:30 AM

சட்டசபை தேர்தல்... ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களிடையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அனைத்துக் கட்சிகளும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன. தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவித்து தீவிரமாக தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ளது.

தேர்தல் பணிகளை துரிதப்படுத்த அ.தி.மு.க. மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

assembly,election,consultation,meeting,admk ,சட்டசபை,தேர்தல்,ஆலோசனை,கூட்டம்,அ.தி.மு.க

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் 20-ம் தேதி மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டசபை தேர்தலுக்காக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :