Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By: Nagaraj Fri, 09 June 2023 7:43:30 PM

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு... அதிமுக பொதுச்செயலர் தேர்வு, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள் மற்றும் பொதுச் செயலா் தோ்தலை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயா்நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

madras,high court,adjourned,case,all rules ,சென்னை, உயர்நீதிமன்றம், ஒத்திவைத்தது, வழக்கு, அனைத்து விதிகள்

இந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகே ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார்.

கட்சியின் அனைத்து விதிகளும் மாறுதலுக்கு உட்பட்டது என்கிற வாதம் இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags :
|
|