பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு
By: vaithegi Sun, 24 Sept 2023 1:46:27 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் தற்போது நடந்து கொண்டு வருகிறது. இதையடுத்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைய உள்ளது.
இதன் பிறகு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை உள்ள 5 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி போன்றவை அரசு விடுமுறை தினங்களாகவும், சனி ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் உள்ளது.
இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் அதிருபியில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் காலாண்டு தேர்வு விடுமுறையின் 7 நாட்களில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் இதற்கான வழிகாட்டுதல் வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறைகள் இதனை அடுத்து நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.