இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
By: vaithegi Tue, 14 Nov 2023 1:19:26 PM
சென்னை : வானிலை மையம் அலர்ட் ... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அது மேலும் வலுவடையும் என்பதால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
அதிலும் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புயிருக்கிறது. அதாவது விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.